தமிழ்நாடு

சென்னை மாலில் நடந்த மதுவிருந்தில் கலந்து கொண்ட ஐடி ஊழியர் பலி!

Published

on

சென்னை அண்ணாநகரில் உள்ள மால் ஒன்றில் நடந்த மது விருந்தில் கலந்து கொண்ட ஐடி ஊழியர் பரிதாபமாக பலியாகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையை பொருத்தவரை சனிக்கிழமை இரவு என்றாலே ஐடி ஊழியர்கள் மது விருந்தில் கலந்து கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை அண்ணாநகரில் உள்ள மால் ஒன்றில் அனுமதி பெறாமல் மது விருந்து நடந்துள்ளதாக தெரிகிறது .

இந்த மது விருந்தில் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பிரவீன் என்பவர் கலந்து கொண்டார். மது விருந்தில் கலந்து கொண்ட சிறிது நேரத்தில் திடீரென மயக்கம் அடைந்து உயிரிழந்ததாக தெரிகிறது.

இது குறித்து காவல் துறையினர் விரைந்து வந்து விசாரணை செய்ததில் உயிரிழந்த இளைஞர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த இளைஞரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே முழு விவரங்கள் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அனுமதி பெறாமல் மது விருந்து நடத்திய மால் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version