தமிழ்நாடு
சென்னை மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பியது: கொரோனா நோயாளிகள் திண்டாட்டம்!
![hospital beds - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/04/hospital-beds.jpg)
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் சென்னையில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து மருத்துவ மனைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பிவிட்டது
சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை காலி இல்லை என்றும் ஐசியூ படுக்கைகளும் காலி இல்லை என்றும் இதற்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள இணையதளம் மூலம் தெரியவந்துள்ளது
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டால் தான் படுக்கைகள் காலியாகும் என்றும், அதுவரை மருத்துவமனை வாசலிலேயே கொரோனா நோயாளிகள் காத்திருப்பது பரிதாபமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
பல நோயாளிகளுக்கு ஆக்சிஜன் உடனே செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில் மருத்துவமனையில் படுக்கை காலியாக இல்லாத காரணத்தினால் ஆம்புலன்ஸில் சிகிச்சை பெற வேண்டிய நிலையில் உள்ளனர்
எனவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தினமும் 15 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருவதால் சென்னை மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
சென்னை மருத்துவமனைகளில் படுக்கை காலி குறித்த விபரங்களை இந்த இணையத்தளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் https://stopcorona.tn.gov.in/beds.php