தமிழ்நாடு
நீட் ஆய்வுக்குழு: கரு.நாகராஜன் வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்!
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு இல்லாமல் செய்வோம் என தேர்தலுக்கு முன்னரே வாக்குறுதி கொடுத்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்ய ஏகே ராஜன் என்பவரது தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது
இந்த குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக பொதுச் செயலாளர் கரு நாகராஜன் அவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த சில நாட்களாக நடைபெற்ற நிலையில் இன்று தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது
கரு நாகராஜன் அவர்கள் இந்த வழக்கை எதற்காக தாக்கல் செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ அந்த நோக்கம் நிறைவேறிவிட்டது என்றும் அவரது நோக்கத்தின் படி அவருக்கு விளம்பரம் கிடைத்துவிட்டது என்றும் தீர்ப்பின் போது நீதிபதி தெரிவித்தார்
மேலும் ஒரு மாநில அரசு ஒரு குழுவை அமைத்து மக்களின் கருத்தை கேட்பதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் இதை உச்ச நீதிமன்றத்திற்கு எதிரானது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது
மேலும் நீட்தேர்வு மாணவர் சேர்க்கைக்கான நடைமுறையை தடுக்கும் வகையில் மாநில அரசு தனது அதிகார வரம்பு மீறவில்லை என்றும் கூறிய நீதிபதி மாநில அரசின் நடவடிக்கை மத்திய அரசின் சட்டத்திற்கு எதிரானது அல்ல என்றும் தெரிவித்தது. எனவே நீட் தாக்கம் குறித்து ஆய்வு குழு அமைத்தது செல்லும் என்றும் கூறி கரு நாகராஜன் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது