தமிழ்நாடு

தமிழில் அர்ச்சனைக்கு தடையா? சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

Published

on

தமிழில் அர்ச்சனை செய்ய தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அன்னை தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்ற திட்டம் சமீபத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது 1998ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை செய்யவேண்டும் என தீர்ப்பளித்து இருந்ததாகவும் கோவில்களில் பின்பற்றப்படும் ஆகம விதிகளின் நடைமுறைகளை மாற்ற முடியாது என்றும் மத விவகாரத்தில் அரசு தலையிட முடியாது என்றும் வாதிட்டார்.

ஆனால் நீதிபதி இதனை ஏற்க மறுத்துவிட்டார். 2008ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்பது பக்தர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது என்றும், தமிழில் அர்ச்சனை செய்ய எந்த தடையும் இல்லை என்றும் கூறினார்.

மேலும் ஒரு குறிப்பிட்ட மொழியில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் வற்புறுத்த முடியாது என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version