தமிழ்நாடு
திறக்கப்படும் பள்ளிகள்: அரசுக்கு உயர் நீதிமன்றம் யோசனை
![School children_0 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/07/School-children_0.jpg)
கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து கொண்டு உள்ளதை அடுத்து கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் சத்துணவு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளதால் கிராமப்புறங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து உடனடியாக தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை நீதிமன்றத்தில் சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்ஷன் குரூப் என்ற அமைப்ப்பு வழக்கு தொடர்ந்தது
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தற்போது கொரோனா பாதிப்பு தணிந்து உள்ளதாலும் மூன்றாவது அலை பரவும் என்பதற்கு எந்தவிதமான அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லாததால் பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்யவேண்டும் என்று நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது
இதனை அடுத்து கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகள் திறப்பதற்கு தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கும் அறிவிப்பு வெளிவந்து கொண்டிருப்பதால் தமிழகத்திலும் விரைவில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கிராமப்புறங்களில் பள்ளிகள் திறந்தால்தான் சத்துணவு மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவு கிடைக்கும் என்பதற்காக சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்ஷன் குரூப் என்ற அமைப்பின் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.