தமிழ்நாடு

கொரோனா இறப்பு சான்றிதழ்: தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு!

Published

on

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு உரிய வகையில் இறப்புச் சான்றிதழ் தர வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு சரியான இறப்பு சான்றிதழ் கிடைக்காததால் நிவாரணம் பெற முடியவில்லை என வழக்கு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரணம் பெறும் வகையில் இறப்புச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதேபோல் அனைத்து மாநில அரசுகளுக்கும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு சரியான இறப்பு சான்றிதழ் வழங்க மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் சரியான இறப்பு சான்றிதழை பெறுகிறார்களா என்பதை தமிழக அரசும் உறுதி செய்ய வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் தனது உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுப்ரீம் கோர்ட் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு கண்டிப்பாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கொரோனாவால் உயிரிழந்த லட்சக்கணக்கானவர்களின் குடும்பத்தினர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது

ஆனால் அதே நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர் என்று இறப்பு சான்றிதழ் இருந்தால் மட்டுமே நிவாரண உதவி கிடைக்கும் என்பதால் இறப்புச் சான்றிதழை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வைத்திருக்க வேண்டும் என்பது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது

seithichurul

Trending

Exit mobile version