Connect with us

தமிழ்நாடு

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் நியமனம் செல்லுமா? உயர்நீதிமன்றம் உத்தரவு

Published

on

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளதால் அதிமுக வட்டாரத்தில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அதிமுக கட்சியின் விதியின்படி பொதுச்செயலாளர் என்ற ஒரு பதவி மட்டுமே இருக்கும் என்றும் அவருக்கு மட்டுமே கட்சியில் புதிய பதவிகளை உருவாக்கும் அதிகாரம் உண்டு என்றும், அதிமுக விதியின்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளை உருவாக்க முடியாது என்றும், அதிமுக உறுப்பினர் வழக்கறிஞருமான ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதிமுகவின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா இருந்த நிலையில் அவருடைய மறைவுக்குப் பின்னர் தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக சசிகலா அதிரடியாக நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இரண்டு பதவிகள் புதிதாக நியமனம் செய்யப்பட்டு அதில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது அதிமுக விதிகளுக்கு முரணானது என்றும் ஜெயலலிதா இருந்தபோது இருந்த விதிகளையே பயன்படுத்த வேண்டும் பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்துவிட்டு ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு கடந்த சில வாரங்களாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் இந்த வழக்கு இன்று முடித்து வைக்கப்பட்டுள்ளது. உட்கட்சி விவகாரத்தில் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் எவ்வாறு தேர்வு செய்யப்படுவார்கள் என்பதை தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என்றும், கட்சி பிரதிநிதிகள் அளிக்கும் பிரமாண பத்திரத்தை ஏற்றுக்கொண்டு நிர்வாகிகளை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதும் தேர்தல் ஆணையத்தின் முடிவு என்றும், தேர்தல் ஆணையத்தின் அந்த முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்களை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் எந்தவித தவறும் இருப்பதாக தெரியவில்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்தார்/ இதனை அடுத்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா3 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்3 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு6 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!