சினிமா செய்திகள்

’இந்தியன் 2’ வழக்கு: லைகா நிறுவனத்திற்கு ஐகோர்ட் கொடுத்த அனுமதி!

Published

on

’இந்தியன் 2’ திரைப்பட வழக்கில் மேல்முறையீடு செய்ய சென்னை ஐகோர்ட், தயாரிப்பு நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளதால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாங்கள் தயாரிக்கும் ’இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் இயக்குனர் ஷங்கர் வேறு படத்தை இயக்கக் கூடாது என்றும் அவர் வேறு படத்தை இயக்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் லைகா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

ஆனால் வேறு படங்களை ஷங்கர் இயக்கக் கூடாது என்று இடைக்கால தடை விதிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதே நேரத்தில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்திற்கு சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து லைக்கா நிறுவனம் இன்னும் ஒரு சில நாட்களில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரம்மாண்டமான பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வந்த ’இந்தியன் 2’ திரைப்படம் ஒரு சில காரணங்களால் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் பொறுமை இழந்த ஷங்கர், பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா நடிக்கும் படத்தை இயக்க ஆரம்பித்து விட்டார் என்பதும் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் ஹிந்தி படம் ஒன்றை இயக்க உள்ளார் என்றும் செய்திகள் வெளியானது.

இந்த இரண்டு திரைப்படங்களையும் முடித்த பின்னர்தான் அவர் ’இந்தியன் 2’ படத்திற்கு திரும்புவார் என்று கூறப்பட்டதால் ’இந்தியன் 2’ தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version