தமிழ்நாடு

இளம்பெண்களை ஏமாற்றினால் கடுமையான தண்டனை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

Published

on

திருமணமானதை மறைத்து, இளம்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தால், கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

காணாமல் போன 10-ம் வகுப்பு மாணவியை மீட்டுத் தர வேண்டும் என்ற ஆட்கொணர்வு மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.

அப்போது மாணவி ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்ததாகவும், அங்கு பணிபுரிந்து வந்த திருமணமான ஒருவரை மணமுடிந்ததாகவும் காவல் துறையினர் அறிக்கை சமர்ப்பித்தனர்.

வீட்டை விட்டு ஓடிப் போகும் இளம் பெண்களை, ஏற்கனவே திருமணமானவர் ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்படி வந்த புகாரின் பெயரில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நீதிபதிகள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதிகள் கேட்டுள்ளனர்.

மேலும், இப்படி திருமணமானதை மறைத்து, இளம்பெண்களை ஏமாற்றியவர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version