தமிழ்நாடு

பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான குண்டர் சட்டம் ரத்து!

Published

on

பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீது குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

kaடந்த சில மாதங்களுக்கு முன்னர் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியை ராஜகோபாலன் மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டை கூறியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன்பின் பல மாணவிகள் அவர் மீது புகார் கூறியதை அடுத்து ஒரே தவறைத் திரும்பத் திரும்ப செய்ததாக கணக்கில் கொண்டு அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது செல்லாது என அறிவிக்கக் கோரி ராஜகோபாலன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த சில நாட்களாக விசாரணையில் இருந்து வந்தது என்பது குறிபிடத்தக்கது.

இந்த நிலையில் பாலியல் குற்றச்சாட்டில் ராஜகோபாலன் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மட்டுமே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version