தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமின் மனு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published

on

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் மனு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனுவில் தீர்ப்பு சற்று முன் வெளியாகி உள்ளது

நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகார் காரணமாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் அதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மணிகண்டன் ஜாமீன் மனு தாக்கல் செய்து இருந்த நிலையில் இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்கள் நடைபெற்றது. இந்த விசாரணையின் போது காவல்துறையினர் மணிகண்டனுக்கு ஜாமீன் அளிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று மணிகண்டனின் ஜாமின் மனு குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சற்று முன் மணிகண்டனின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி வழங்கினார். முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் சற்றுமுன் உத்தரவிட்டுள்ளது. அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரண்டு வாரங்களுக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மணிகண்டனின் பாஸ்போர்ட்டை சைதாப்பேட்டை உயர் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version