சினிமா செய்திகள்

ஹன்சிகா மீது எடுத்த நடவடிக்கை என்ன? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி

Published

on

ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் மஹா படத்தின் போஸ்டர்கள் பெரும் சர்ச்சையை கிளப்பின. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக எடுத்த நடவடிக்கை என்ன? என காவல்துறையிடம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்விகளை அடுக்கியுள்ளனர்.

இயக்குநர் ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா சோலோ ஹீரோயினாக நடிக்கும் படம் மஹா. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அகோரியாக வேடமணிந்து ஹன்சிகா கஞ்சா அடிப்பது போன்றும், மற்றொரு போஸ்டரில் ரத்தம் நிறைந்த பாத் டப்பில் நிர்வாணமாக கையில் துப்பாக்கியுடன் குளிப்பது போன்றும் போஸ்டர்கள் ரிலீசாகி சர்ச்சையைக் கிளப்பின.

இதனை தொடர்ந்து, இந்து மதத்தை கொச்சைப்படுத்துவதாகக் கூறி, இந்து மக்கள் முன்னனி அமைப்பாளர் நாராயணன், நாயகி ஹன்சிகா மீதும் இயக்குநர் ஜமீல் மீதும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

ஆனால், புகார் கொடுத்து இரண்டு மாதங்கள் ஆகியும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்தரையன், இந்த புகார் தொடர்பாக ஹன்சிகா மற்றும் இயக்குநர் ஜமீல் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என கேள்வி எழுப்பினார். மேலும், இரண்டு வாரத்திற்குள் அதுகுறித்த ஆவணங்களை சமர்பிக்கவும் நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Trending

Exit mobile version