தமிழ்நாடு

நடிகர் விஜய் மேல்முறையீடு வழக்கு: சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

Published

on

நடிகர் விஜய்யின் மேல்முறையீடு வழக்கில் முக்கிய உத்தரவை சென்னை ஐகோர்ட் பிறப்பித்துள்ளது.

நடிகர் விஜய் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ரோல்ஸ்ராய்ஸ் என்ற சொகுசு காரை வாங்கினார். அந்த காருக்கு அவர் இறக்குமதி வரியை செலுத்தி விட்ட நிலையில் நுழைவு வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் சென்றார்.

விஜய்யின் வழக்கை விசாரித்த தனி நீதிபதி விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததோடு அவரைப் பற்றி சர்ச்சைக்குரிய சில கருத்துக்களையும் தெரிவித்தார். இந்த கருத்து குறித்து முன்னாள் நீதிபதிகள், அரசியல் பிரபலங்கள், திரை உலக பிரபலங்கள் என பலர் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய் அபராதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தன்னைப் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்க வேண்டும் என்றும் கூறி விஜய் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்த நிலையில் வரி மதிப்பீட்டு அமர்வுக்கு மாற்ற நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் இந்த வழக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டது என்று செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தனி நீதிபதி உத்தரவு நகல் இல்லாமல் வழக்கை எண்ணிட்டு விசாரணைக்கு பட்டியலிட பதிவுத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து விஜய்யின் மேல்முறையீட்டு வழக்கு இன்று பட்டியலிடப்படும் என்றும் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் தேதியின் விரைவில் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version