இந்தியா

நீட் தேர்வு குறித்த முக்கிய உத்தரவை பிறப்பித்த சென்னை ஐகோர்ட்!

Published

on

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு ஆகஸ்ட் 1ஆம் தேதி நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது என்பது குறித்து ஏற்கனவே பார்த்தோம். 11 மொழிகளில் நடைபெறும் இந்த தேர்வை எழுதுவதற்காக மாணவர்கள் தற்போது தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் நீட் தேர்வுக்கு கூடுதல் மையங்களை அமைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் தற்போது இது குறித்த முக்கிய உத்தரவை சென்னை ஐகோர்ட் பிறப்பித்துள்ளது.

நீட் தேர்வு கூடுதல் மையங்களை அமைக்க வேண்டும் என்றும் அடுத்த ஆண்டு முதல் இதனை செயல்படுத்த வேண்டும் என்றும் தேசிய தேர்வு வாரியத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வு கூடுதல் மையங்கள் அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று தேசிய தேர்வு வாரியத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் இந்த ஆண்டு வழக்கம் போல் நடக்கும் எண்ணிக்கையிலான மையங்களில் மட்டும் தான் நீட் தேர்வு நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version