தமிழ்நாடு
கூட்டுறவு சங்க தற்காலிக பணியாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றிவரும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று அதிரடியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றி வரும் அனைத்து தற்காலிக பணியாளர்களையும் இன்னும் எட்டு வாரங்களில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவின் காரணமாக ஏராளமான தற்காலிக பணியாளர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது