தமிழ்நாடு

தாலி கட்டும்போது திடீரென மயங்கி விழுந்த சென்னை மணமகள்: அதிர்ச்சி காரணம்!

Published

on

சென்னை சேர்ந்த இளம்பெண் தாலி கட்டுவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன் திடீரென மண மேடையில் மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
சென்னை பாடி பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த கீர்த்தனா என்பவருக்கும் இருதரப்பு பெரியவர்கள் திருமணம் நிச்சயம் செய்து, அனைத்து பணிகளை முடித்தனர்.

திருமண தினத்தன்றும் வண்ணாரப்பேட்டை உள்ள காஞ்சி வண்ணாரப்பேட்டையில் உள்ள காமாட்சியம்மன் கோவிலில் திருமணம் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயாராகியது. இருதரப்பு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நண்பர்களின் திருமணத்தில் மணமக்களுக்கு ஆசீர்வாதம் செய்ய குவிந்திருந்தனர்.

இந்த நிலையில் மணமேடையில் கீர்த்தனா வந்தபோது அவருக்கு தாலி கட்ட செல்வம் தயாரான நிலையில் திடீரென கீர்த்தனா மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த கீர்த்தனா பெற்றோர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்தபோது ரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது என்று சொன்ன போது திடீரென கீர்த்தனா எழுந்து உட்கார்ந்தார் .

இதனால் கீர்த்தனாவின் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தாலும் அதன்பின் அதிர்ச்சி அடைந்தனர். தான் மயங்கியது போல் நடித்ததாகவும் இந்த திருமணத்திற்கு சம்மதம் இல்லை என்றும் தான் வேறு ஒருவரை காதலித்து வருவதாகவும் அவரை தான் திருமணம் செய்வேன் என்றும் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகனின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க இதுகுறித்து காவல்துறையினர் இருதரப்பினரையும் பேசி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version