தமிழ்நாடு
6 வழிச்சாலையாக மாறும் ஈசிஆர்.. தூக்கத்தில் இருக்கும் போராளிகள்!
கடந்த அதிமுக ஆட்சியின்போது சென்னை- சேலம் இடையே நான்கு வழி சாலை திட்டம் அமல்படுத்த முயற்சி செய்தபோது வெகுண்டெழுந்த போராளிகள் தற்போது அதே சாலை போடுவதற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கும் நிலையில் அமைதியாக இருப்பது ஏன் என்ற கேள்வியை நெட்டிசன்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த நிலையில் சென்னை – சேலம் சாலையை அடுத்து தற்போது ஈசிஆர் சாலை ஆறு வழிச்சாலை ஆக மாற்ற தமிழக நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது. ஈசிஆர் சாலைகளின் இருபுறமும் 11 மீட்டர் அகலத்தில் 6 வழிச் சாலையாக தரம் உயர்த்தும் பணியைத் தொடங்கி உள்ளதாக தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலை துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மாமல்லபுரத்திலிருந்து புதுச்சேரி வரை நான்கு வழிச்சாலையாக மாற்ற ரூ.1834 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல் புதுச்சேரி முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழிசாலைக்கு ரூ.6845 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் நெடுஞ்சாலைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சாலையை விரிவுபடுத்துவதற்கு நிலம் கையகப்படுத்தப்படும் நடவடிக்கை விரைவில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விளைநிலங்களை அழித்து எங்களுக்கு சாலை தேவை இல்லை என்று கடந்த ஆட்சியில் போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் அனைவரும் தற்போது அமைதியாக உள்ளனர் என்பதும் எந்தவித போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.