Connect with us

தமிழ்நாடு

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்: வணிகர்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

Published

on

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கடையில் வைத்து இருந்தால் 10 நாட்களுக்குள் அவற்றை அகற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்ப்பதற்காக 2019ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தப்படும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது என்பது தெரிந்ததே. தமிழக அரசு தடை விதித்தாலும் சில வணிகர்கள் அந்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வந்தனர். இதனை தடுப்பதற்காக சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு குழு அமைக்கப்பட்டு கடைகள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு வந்தது.

ஆனால் 2020 ஆம் ஆண்டு திடீரென கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதை அடுத்து அந்த குழுவில் உள்ள பணியாளர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பயன்பாடு தங்குதடையின்றி இருந்தது. இந்த நிலையில் தற்போது வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து மீண்டும் அந்த குழு செயல்பட தொடங்கியுள்ளது.

கடந்த 19ஆம் தேதி திடீரென சென்னையில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தபோது 2773 கடைகளில் 1390 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, 13 லட்சத்திற்கும் அதிகமான அபராதம் வசூலிக்கப்பட்டது என்பதும் ஒரு கடைக்கு சீல் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இது குறித்து கூறிய போது சென்னையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தடுக்கும் பணியில் பணியை தீவிரப்படுத்த கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தங்களது கடைகள் இருக்குமானால் பத்து நாட்களுக்குள் அவற்றை அகற்ற வேண்டும் என்று வணிகர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் மற்றும் தொழில் உரிமம் ரத்து உள்பட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக வாழை இலை, அலுமினியத்தால் காகிதச் சுருள், தாமரை இலை, மூங்கிலால் ஆன பொருட்கள், துணி, காகிதம் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

author avatar
seithichurul
வணிகம்5 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு6 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா7 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்8 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா8 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்7 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!