தமிழ்நாடு

சென்னையில் பட்டாசு வெடிக்கும் நேரம்: காவல் ஆணையர் அறிவிப்பு!

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன என்பதும் இந்த கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் தரப்பிலிருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி ஒரு சில குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என சுற்றுச்சூழல் துறை தெரிவித்து வருகிறது என்பதும் இதற்கு தீபாவளி கொண்டாடுபவர்கள் மத்தியில் இருந்து கண்டனங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அவர்கள் சற்று முன்னர் சென்னையில் பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சென்னையில் காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை என இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தால் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை காவல் ஆணையர் சங்கத்தில் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இதே போல் சென்னையில் பட்டாசு வெடிக்கும் நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருவதை அடுத்து இந்த ஆண்டும் அதே போல் காலையில் ஒரு மணி நேரம் இரவில் ஒரு மணி நேரம் என இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version