Connect with us

தமிழ்நாடு

சென்னை – கோவை வந்தே பாரத் இரயில்: முன்பதிவு தொடங்கியது!

Published

on

கோவை – சென்னை இடையே நாளை மறுநாள் ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் ‘வந்தே பாரத்’ இரயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான பயணிகள் முன்பதிவு தொடங்கி உள்ளது.

வந்தே பாரத் இரயில்

சென்னை – கோவை இடையேயான ‘வந்தே பாரத்’ இரயில் சேவையை நாளை பிரதமர் மோடி சென்னை சென்ட்ரலில் தொடங்கி வைக்க உள்ளார். தமிழ்நாட்டுக்கு உள்ளேயே இயக்கப்படும் முதல் ‘வந்தே பாரத்’ ரயில் இது என்பதே குறிப்பிடத்தக்கது. இதன்படி, வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் புதன்கிழமை தவிர்த்து, வாரத்தின் மற்ற 6 நாட்களும் வந்தே பாரத் இரயில் இயக்கப்படும்.

இரயில் இயக்கப்படும் நேரம்

இந்த இரயில் கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, காலை 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும். செல்லும் வழியில், திருப்பூருக்கு காலை 6.35 மணிக்கு நின்று, காலை 6.37 மணிக்கு புறப்படும். அதன் பின்னர் ஈரோட்டுக்கு காலை 7.12 மணிக்கு சென்றடைந்து, காலை 7.15 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். சேலத்துக்கு காலை 7.58 மணிக்கு வந்து, காலை 8 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

மறுமார்க்கத்தில், சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு, இரவு 8.15 மணிக்கு கோவை இரயில் நிலையத்தை வந்தடையும். வரும் வழியில், சேலத்துக்கு மாலை 5.48 மணிக்கு வந்து, மாலை 5.50 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். அதன் பின்னர், ஈரோட்டிற்கு மாலை 6.32 மணிக்கு வந்தடைந்து, மாலை 6.35 மணிக்கு புறப்படும். அடுத்ததாக திருப்பூருக்கு இரவு 7.13 மணிக்கு வந்து, இரவு 7.15 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

முன்பதிவு

வந்தே பாரத் இரயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி AC Chair Car வகுப்பில், சென்னையில் இருந்து கோவை செல்வதற்கு ரூ.1,215 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. AC Executive Chair Car வகுப்பில் சென்னையில் இருந்து கோவை செல்வதற்கு ரூ.2,310 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், காலியாக இருக்கும் பயணச் சீட்டுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து கட்டணம் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்12 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா10 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்10 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?