தமிழ்நாடு

சென்னைக்கு இண்டர்வியூக்கு வந்த 5 இளைஞர்கள் கார் விபத்தில் மரணம்!

Published

on

சென்னைக்கு இன்டர்வியூக்கு சொகுசு காரில் வந்த ஐந்து இளைஞர்கள் விபத்தில் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

சென்னையில் உள்ள இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்த ஐந்து பேர் நாளை சென்னையில் நடைபெற உள்ள இன்டர்வியூவில் கலந்துகொள்வதற்காக சென்னைக்கு வந்துள்ளனர்.

மேட்டூரை சேர்ந்த நவீன், ராஜஹாரீஸ், திருச்சியை சேர்ந்த அஜய், புதுக்கோட்டையை சேர்ந்த ராகுல், சென்னையை சேர்ந்த அரவிந்த் சங்கர் ஆகியோர் சென்னையில் லாட்ஜ் ஒன்றில் ரூம் எடுத்து தங்கி உள்ளனர். இதனையடுத்து அவர்கள் நேற்று இரவு திநகர் சென்று சில பொருட்களை வாங்கிவிட்டு நைட் டிரைவ் செய்யலாம் என்பதற்காக காரை ஜிஎஸ்டி சாலை ஒட்டியுள்ளனர். காரை நவீன் ஓட்டி வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் பெருங்குளத்தூர் அருகே இளைஞர்கள் ஓட்டி வந்த கார் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் திடீரென மோதியது. மோதிய வேகத்தில் சொகுசு கார் இரும்பு கம்பிகளை அடுக்கி வைக்கப்பட்டிருந்த லாரிக்கு அடியில் சிக்கிக் கொண்டதாகவும் இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேரும் பலியானதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தீயணைப்பு துறையினர் உதவியுடன் போராடி காரில் இருந்த 5 பேரின் உடல்களை மீட்டனர். இதனையடுத்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு 5 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கார் மீது மோதிய அடையாளம் தெரியாத வாகனம் கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாகவும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் சொகுசு காரில் நண்பர்களுடன் சென்ற திமுக எம்எல்ஏ ஒருவரின் மகன் உயிரிழந்த நிலையில் தற்போது பொறியியல் படித்த 5 இளைஞர்கள் விபத்தில் மறைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version