தமிழ்நாடு
பொங்கல் சிறப்பு பேருந்துகள்: எந்தெந்த ஊர்களுக்கு எந்தெந்த பேருந்து நிலையங்கள் செல்ல வேண்டும்?
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகள் விடப்படும் என்றும் 16 ஆயிரத்துக்கும் அதிகமான பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் தெரிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் சற்றுமுன் போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னையில் எந்தெந்த பேருந்து நிலையங்களில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளம்பும் என்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
மாதவரம் பேருந்து நிலையம்: செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள் மற்றும் ஆந்திர மாநிலத்தில் செல்லும் பேருந்துகள்
கேகே நகர் பேருந்து நிலையம்: ஈசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர், மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.
தாம்பரம்: திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர், செல்லும் பேருந்துகள்.
தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம்: திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை, போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி, திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், செல்லும் பேருந்துகள் .
பூந்தமல்லி பேருந்து நிலையம்: வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி செல்லும் பேருந்துகள்.
கோயம்பேடு பேருந்து நிலையம்: மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, நெல்லை, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோவை, எர்ணாகுளம், திருவனந்தபுரம் மற்றும் பெங்களூர் செல்லும் பேருந்துகள்.