தமிழ்நாடு
சென்னையில் குடிசை மாற்று வாரியம் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: பெரும் பரபரப்பு
சென்னையில் குடிசை மாற்று வாரிய கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் உள்ள திருவொற்றியூர் என்ற பகுதியில் இருபத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே குடிசை மாற்று வாரிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த நிலையில் இந்த கட்டிடத்தின் உள்ள ஒரு பகுதியில் திடீரென இன்று காலை விரிசல் ஏற்பட்டது. அது மட்டுமன்றி கட்டிடம் லேசாக சாய்ந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது
இதனை அடுத்து அந்த கட்டிடத்தில் உள்ள குடியிருப்பு வாசிகள் உடனடியாக கட்டிடத்தில் இருந்து வெளியேறினார்கள். இதனையடுத்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் விரிசல் ஏற்பட்டு சற்று சாய்ந்திருந்த குடிசை மாற்று வாரியம் கட்டடம் சற்றுமுன் இடிந்து விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முன்கூட்டியே அந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் வெளியேறி விட்டதால் யாருக்கும் காயம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.