தமிழ்நாடு

சென்னை புத்தக கண்காட்சி தேதி அறிவிப்பு!

Published

on

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சி நடைபெறும் என்பதும் இந்த புத்தக கண்காட்சியில் நூற்றுக்கணக்கான புத்தக பதிப்பாளர்கள், லட்சக்கணக்கான புத்தக விரும்பிகள் கலந்து கொள்வார்கள் என்பதும் ஏராளமான புத்தகங்கள் விற்பனை ஆகும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சி நடத்துவதற்காக தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென தமிழக அரசு புத்தகக்கண்காட்சி நடத்துவதற்கான அனுமதியை ரத்து செய்தது. இதனால் புத்தக பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விரும்பிகள் அதிருப்தி அடைந்தனர்.

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து உள்ளதை அடுத்து சென்னை புத்தக கண்காட்சிக்கு அனுமதி அளிக்க வேண்டுமென பபாசி அமைப்பினர் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த வேண்டுகோளை பரிசீலனை செய்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சற்று முன்னர் சென்னையில் புத்தக கண்காட்சியை பிப்ரவரி 16 முதல் மார்ச் 6ஆம் தேதி வரை நடத்த அனுமதி அளித்துள்ளார். இதனை அடுத்து பபாசி அமைப்பினர் தமிழக முதல்வருக்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version