தமிழ்நாடு
மனைவி, 2 குழந்தைகளை கொன்றுவிட்டு சென்னை வங்கி அதிகாரி தற்கொலை: அதிர்ச்சி காரணம்!
மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொன்று விட்டு சென்னையை சேர்ந்த வங்கி அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த வங்கி அதிகாரி மணிகண்டன் என்பவர் ஆன்லைன் விளையாட்டில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வந்ததாகவும் அதில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து அவர் பலரிடம் கடன் வாங்கி ஆன்லைன் விளையாட்டு விளையாடி அதிலும் தோல்வி அடைந்ததாகவும் கடன்காரர்கள் நெருக்குதல் தாங்கமுடியாமல் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடன் தொல்லை காரணமாக மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொன்று விட்டு வங்கி அதிகாரி மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து காவல்துறையினர் நான்கு பிணங்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். வங்கி அதிகாரி ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தனது குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.