தமிழ்நாடு

சென்னை – அரக்கோணம் மின்சார ரயில்கள் இன்று ரத்தா?

Published

on

சென்னை – அரக்கோணம் இடையே இன்று மின்சார ரயில் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து ரேணிகுண்டா சென்ற சரக்கு ரயில் ஒன்று திடீரென மோசூர் என்ற பகுதியில் தடம்புரண்டது. சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதால் அந்தப் பெட்டிகளை மீட்கும் பணியில் ரயில்வே துறையினர் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக சென்னை – அரக்கோணம் இடையே செல்லும் மின்சார ரயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

சரக்கு ரயில் தடம் புரண்டதால் சென்னை- அரக்கோணம் இடையே இயங்கும் மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தடம்புரண்ட ரயில் பெட்டிகளைன் மீட்பு பணிக்கு பின்னரே இந்த பகுதியில் மின்சார ரயில் இயக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது

இதனால் தினசரி அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வரும் ஊழியர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் பெரும் அவதியில் உள்ளனர் என்பதும் அவர்கள் தற்போது பேருந்துகளில் வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது

seithichurul

Trending

Exit mobile version