தமிழ்நாடு

சென்னை நகராட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் மக்களின் வேட்பாளர்!

Published

on

சென்னை மக்களின் ஆதரவைப் பெற்ற மக்களின் வேட்பாளர் அப்துல் ஜலீல் சென்னை மாநகராட்சி தேர்தலில் 104 வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

அப்துல் ஜலீல் என்ற சுயேச்சை வேட்பாளர் அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலமானவர். நீட், கதிராமங்கலம், ஜல்லிக்கட்டு உள்பட பல்வேறு போராட்டங்களில் மக்களின் ஆதரவுடன் நின்றவர். அதுமட்டுமின்றி 2016 வெள்ளத்தின் போதும், கொரோனா தொற்றின் போதும் அந்த பகுதி மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்த நிலையில் 23 குழந்தைகளை தனது சொந்த செலவில் படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார்

கடந்த 13 ஆண்டுகளாக இலவச ஆம்புலன்ஸ் சேவை செய்துவரும் இவர் ஆறு ஆண்டுகளில் 63 குழந்தைகளின் இதய சிகிச்சைக்காகவும் உதவியுள்ளார். சென்னையில் உள்ள 104 ஆவது வார்டு மக்களுக்கு அவர் கொடுத்துள்ள வாக்குறுதிகள் இதோ:

நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே இந்த திருமங்கலம் பகுதி தான். கடந்த 3 தலைமுறையாக நாங்க இங்க தான் இருக்கோம். நான் படிக்காதவன். அதனால் படிக்க வசதி இல்லாத மாணவர்களுக்கு படிக்க வைக்கிறேன். இதையே என்னுடைய தேர்தல் வாக்குறுதியாகவும் கொடுத்துள்ளேன். தரமான சாலை, குடிநீர், சுகாதாரம் என்பது இப்பகுதியை பொறுத்த வரை மக்களுக்கு எட்டா கனியாக தான் உள்ளது. அதனால் சமூக ஆர்வலரா பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்த எனக்கு, என் மக்களின் தேவைகளை அறிந்து உதவிடவே அரசியலுக்கு வந்துள்ளேன்.

ஏழை எளிய மக்களுக்கு இலவச பட்டா மகளிர் சுய தொழிலுக்கு அரசிடமிருந்து நேரடி கடன் தரமான சாலைகள் மாணவ மாணவிகளுக்கு இலவச கணினி பயிற்சி ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவைகளை அமைத்து தருவேன் என்று கூறியுள்ளார்.

மேலும் சென்னையின் 104வது வார்டை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளுக்கும் முன் மாதிரியாக எனது வார்டை மாற்றுவேன் என உறுதி அளித்துள்ள சுயேட்சை வேட்பாளர் அப்துல் ஜலீல் பூப்பந்து மட்டை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த வார்டில் நிச்சயம் அப்துல் ஜலீல் வெற்றி பெறுவார் என அந்த பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version