சினிமா செய்திகள்
‘செம்பருத்தி’ ஷபானாவை காதலிக்கும் டிவி நடிகர்: நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா?
செம்பருத்தி சீரியலில் நாயகியாக நடித்து வரும் நடிகை ஷபானா, டிவி நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாகவும் வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜீடிவியில் 1100 எபிசோடுகளுக்கும் மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் செம்பருத்தி. இதில் முதலில் ஆதி கேரக்டரில் கார்த்திக் ராஜ் நடித்து வந்த நிலையில் தற்போது அதே கேரக்டரில் அக்னி என்பவர் நடித்து வருகிறார்.
ஷபானா நாயகியாக ஆரம்பம் முதலே நடித்து வருகிறார் என்பதும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாக்கியலட்சுமி உள்பட பல செய்திகளில் நடித்த ஆர்யன் என்பவர், செம்பருத்தி ஷபானாவை காதலிப்பதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் கூறப்படுகிறது.
இதனை உறுதி செய்யும் வகையில் ஆரியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்று கூறப்படுகிறது. அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் ஆர்யன் கூறியிருப்பதாவது.
“அவளுடைய மனதுடன் காதலில் விழுந்தேன். ஏனென்றால் ஒரு நாள் இருவருக்குமான கெமிஸ்ட்ரி குறையும். மேலும் ஒரு நாள் வெளிப்புற அழகு மங்கி விடும். ஆனால் மனசு என்பது வயது இல்லாதது. நித்தியமானது, அது தான் அன்பு வாழும் இடம்” என்று குறிப்பிட்டுள்ளார். ஆர்யனின் பதிவுக்கு பதில் கொடுத்துள்ள நடிகை ஷபானா, “நீங்கள் என்னை வியக்க வைக்க எப்போதும் தவற மாட்டீர்கள்.