தமிழ்நாடு

நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் ஏரி.. இன்று இரவு தண்ணீர் திறக்க வாய்ப்பு!

Published

on

சென்பரபாக்கம் ஏரி நிரம்பு முழு கொள்ளவை எட்ட உள்ளதா, இன்று இரவு தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது.

சென்னைக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம் ஏரி, அதன் 24 அடி கொள்ளவில், 22 அடியை எட்டியுள்ளது. கடந்த சில வாரங்களாகச் சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் பெய்த மழையின் காரணமாக செம்பரபாக்கம் ஏரி 21 அடி வரை நிரம்பி இருந்தது.

நிவர் புயல் அறிகுறி காரணமாக நேற்று முதல் சென்னையில் பெய்து வரும் மலையால், செம்பரபாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை எட்டியுள்ளது. மழை வரத்தை பொறுத்தே ஏரி திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், இன்று இரவு நிவர் பயல் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதால், செம்பரம்பாக்கம் ஏரி இன்று திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version