தமிழ்நாடு

11 ஆண்டுகளாக உறவுக்கு மறுத்த மனைவி: நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

Published

on

11 ஆண்டுகளாக கணவனுடன் உறவு கொள்ள மறுத்த மனைவி குறித்த வழக்கு நீதிமன்றத்தில் வந்த நிலையில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த கணவர் ஒருவர் தனது மனைவி தன்னை விட்டு பிரிந்து 11 ஆண்டுகள் ஆகி விட்டதாகவும் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தும், நல்ல நேரம் வரவில்லை என்று கூறி 11 ஆண்டுகள் தன்னை தட்டிக்கழித்ததாகவும், எனவே தனது மனைவியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது. 2010ஆம் ஆண்டு திருமணம் நடந்தததிலிருந்து கணவன் மனைவி இருவரும் 11 நாட்கள் மட்டுமே வாழ்ந்து இருக்கிறார்கள் என்றும் அதன்பின் தனது தாயார் வீட்டுக்கு சென்ற மனைவி, குடும்பம் நடத்துவதற்கு நல்ல நேரம் வரவில்லை என்று கூறி கணவனின் அழைப்பை தட்டிக் கழித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனது மனைவி தன்னுடன் 11 ஆண்டுகளாக குடும்பம் நடத்த வரவில்லை என்பதால் அவரிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மனைவியிடம் விசாரித்தபோது இப்போதும் நான் கணவருடன் வாழ தயாராக இருக்கிறேன் என்றும் ஆனால் நல்ல நேரம் இன்னும் அமையவில்லை என்றும் கூறினார்.

அவரது வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள் நல்ல நேரம் என்பதே மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துவது தான் என்றும், கணவருடன் செல்ல விருப்பமில்லாமல் மனைவி இவ்வாறு கூறுகிறார் என்பது ஆதாரங்களின் அடிப்படையில் தெரிய வருகிறது என்று கூறி, கணவரின் மனுவை ஏற்று இருவருக்கும் விவாகரத்து வழங்கப்படுவதாக தீர்ப்பளித்தார்கள். இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version