இந்தியா

ஆண்டு வருமானம் ரூ.5.5 கோடி.. மொத்த சொத்து மதிப்பு ரூ.24 கோடி: எப்படி வந்தது சாந்தா கோச்சாருக்கு?

Published

on

முன்னாள் ஐசிஐசிஐ வங்கியின் சிஇஓ மற்றும் மேனேஜிங் டைரக்டர் சாந்தா கோச்சார் மொத்தம் ரூபாய் 24 கோடி ரூபாய் சொத்து வைத்து இருப்பதாகவும் அதில் இருந்து அவருக்கு ஒவ்வொரு வருடமும் 5.5 கோடி ரூபாய் வருமானம் வருவதாகவும் சிபிஐ கண்டு பிடித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னால் ஐசிஐசிஐ வங்கி தலைவர் சாந்தா கோச்சார் வீடியோகான் நிறுவனத்திற்கு கடன் வழங்கியதில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவரை கடந்த வெள்ளிக்கிழமை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அவரது கணவர் தீபக் கோச்சார் அவர்களும் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2012ஆம் ஆண்டு வீடியோகான் நிறுவனத்திற்கு 3650 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டதாகவும் அந்த கடன் அவரது கணவர் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதாகவும் அதன் பின்னர் அந்த கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சிபிஐ வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கின் அடிப்படையில் நேற்று முன்தினம் தனது கணவருடன் சாந்தா கோச்சார் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் சாந்தா கோச்சாருக்கு இதுவரை வெளியான தகவலின்படி 24 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 22 வயதில் ஒரு சாதாரண பெண்ணாக ஐசிஐசிஐ வங்கியில் வங்கி பயிற்சியாளராக வேலைக்கு சேர்ந்த சாந்தா கோச்சார் அதன்பிறகு 25 ஆண்டுகளில் அவர் வங்கியை முன்னேற்றுவதற்கு கடுமையாகப் பாடுபட்டார்.

இந்தியாவின் முதல் பெண் வங்கியின் சிஇஓ என்ற பெருமை அவருக்கு கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் அவரது அவர் மீது குற்றம் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2011ஆம் ஆண்டு மும்பையில் உள்ள ஆடம்பர பங்களா ஒன்றை வாங்கினார் என்றும் அதன் மதிப்பு சுமார் 1.1 கோடி என்றும் கூறப்படுகிறது. மேலும் அவருக்கு பல ரியல் எஸ்டேட்டுக்கு சொத்துக்கள் இருப்பதாகவும் தெரிகிறது. உலகிலேயே மிக உயர்ந்த விலையுள்ள சொகுசு கார்களில் சிலவற்றை சாந்தா கொச்சார் வைத்துள்ளார் என்றும் குறிப்பாக மெர்சிடிஸ்-பென்ஸ் மற்றும் ஃபோர்டு கார்கள் அவரிடம் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

பல்வேறு துறைகளில் சாந்தா கோச்சார் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளதாகவும் அவரது தனிப்பட்ட முதலீடுகள் மட்டும் சுமார் 14 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

கடந்த 1961 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜோத்பூரில் கோச்சார் பிறந்தார். அதன் பின் அவர் காற்றாலை தொழிலதிபர் தீபக் என்பவரை மணந்தார் என்பதும் அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version