Connect with us

இந்தியா

ஆண்டு வருமானம் ரூ.5.5 கோடி.. மொத்த சொத்து மதிப்பு ரூ.24 கோடி: எப்படி வந்தது சாந்தா கோச்சாருக்கு?

Published

on

முன்னாள் ஐசிஐசிஐ வங்கியின் சிஇஓ மற்றும் மேனேஜிங் டைரக்டர் சாந்தா கோச்சார் மொத்தம் ரூபாய் 24 கோடி ரூபாய் சொத்து வைத்து இருப்பதாகவும் அதில் இருந்து அவருக்கு ஒவ்வொரு வருடமும் 5.5 கோடி ரூபாய் வருமானம் வருவதாகவும் சிபிஐ கண்டு பிடித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னால் ஐசிஐசிஐ வங்கி தலைவர் சாந்தா கோச்சார் வீடியோகான் நிறுவனத்திற்கு கடன் வழங்கியதில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவரை கடந்த வெள்ளிக்கிழமை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அவரது கணவர் தீபக் கோச்சார் அவர்களும் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2012ஆம் ஆண்டு வீடியோகான் நிறுவனத்திற்கு 3650 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டதாகவும் அந்த கடன் அவரது கணவர் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதாகவும் அதன் பின்னர் அந்த கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சிபிஐ வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கின் அடிப்படையில் நேற்று முன்தினம் தனது கணவருடன் சாந்தா கோச்சார் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் சாந்தா கோச்சாருக்கு இதுவரை வெளியான தகவலின்படி 24 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 22 வயதில் ஒரு சாதாரண பெண்ணாக ஐசிஐசிஐ வங்கியில் வங்கி பயிற்சியாளராக வேலைக்கு சேர்ந்த சாந்தா கோச்சார் அதன்பிறகு 25 ஆண்டுகளில் அவர் வங்கியை முன்னேற்றுவதற்கு கடுமையாகப் பாடுபட்டார்.

இந்தியாவின் முதல் பெண் வங்கியின் சிஇஓ என்ற பெருமை அவருக்கு கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் அவரது அவர் மீது குற்றம் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2011ஆம் ஆண்டு மும்பையில் உள்ள ஆடம்பர பங்களா ஒன்றை வாங்கினார் என்றும் அதன் மதிப்பு சுமார் 1.1 கோடி என்றும் கூறப்படுகிறது. மேலும் அவருக்கு பல ரியல் எஸ்டேட்டுக்கு சொத்துக்கள் இருப்பதாகவும் தெரிகிறது. உலகிலேயே மிக உயர்ந்த விலையுள்ள சொகுசு கார்களில் சிலவற்றை சாந்தா கொச்சார் வைத்துள்ளார் என்றும் குறிப்பாக மெர்சிடிஸ்-பென்ஸ் மற்றும் ஃபோர்டு கார்கள் அவரிடம் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

பல்வேறு துறைகளில் சாந்தா கோச்சார் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளதாகவும் அவரது தனிப்பட்ட முதலீடுகள் மட்டும் சுமார் 14 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

கடந்த 1961 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜோத்பூரில் கோச்சார் பிறந்தார். அதன் பின் அவர் காற்றாலை தொழிலதிபர் தீபக் என்பவரை மணந்தார் என்பதும் அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்11 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா10 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்10 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்