தமிழ்நாடு

இன்னும் 3 மணி நேரத்தில் இந்த 15 மாவட்டங்களில் மழை கொட்டுமாம்! வானிலை அறிவிப்பு

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் இடை இடையே மழை பெய்தால் மட்டுமே பொதுமக்கள் நிம்மதி அடைவார்கள் என்று கூறப்பட்டது.

அந்த வகையில் கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் அந்த பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு உள்ளனர். ஆனால் சென்னை உள்பட வட மாவட்டங்களில் கடும் வெயில் கொளுத்தி வருவதால் மக்கள் அனலில் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் சற்று சந்தோஷத்தில் உள்ளனர். ஆனால் அதே நேரத்தில் மீண்டும் சென்னை உள்பட வட மாவட்டங்கள் இந்த பட்டியலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறிய அந்த 15 மாவட்டங்களில் பெயர்கள் பின்வருமாறு கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி, நாமக்கல், கரூர், தர்மபுரி ஆகிய 15 மாவட்டங்களில் தான் இன்னும் சில மணி நேரங்களில் நல்ல மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version