தமிழ்நாடு

பலத்த சூறாவளி வீச வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Published

on

வடக்கு தமிழக கடற்கரையோர பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீச வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த காற்றழுத்த தாழ்வு, தாழ்வு மண்டலமாக மாறி இன்று அதிகாலை கரையை கடந்தது என்பதும் இதன் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் அதிக மழை பெய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

காற்றழுத்த தாழ்வு மையம் சென்னை மற்றும் புதுவை இடையே கரையை கடந்த நிலையிலும் இன்னும் பல இடங்களில் மேகமூட்டமாக உள்ளது என்பதும் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வடக்கு தமிழக கடலோர மற்றும் தெற்கு ஆந்திர கடலோர ஆகிய பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீச வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இதன் காரணமாக கடலுக்குள் மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version