வணிகம்

உத்திர பிரதேசத்தில் செய்ய இருந்த ரூ.550 கோடி முதலீட்டை தமிழகத்திற்கு மடை மாற்றிய பிரபல நிறுவனம்.. என்ன காரணம்?

Published

on

இந்தியாவின் முன்னணி பிளைவுட் நிறுவனமான செஞ்சுரி பிளைவுட்ஸ், 550 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னையில் புதிய தொழிற்சாலையை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

முன்னதாக இந்த முதலீட்டை உத்திர பிரதேசத்தில் செஞ்சுரி பிளைவுட்ஸ் முடிவு செய்திருந்தது. ஆனால் நீண்ட காலமாக அதற்கான உரிமம் பெறுவதில் இழுப்பறி ஏற்பட்டு வந்துள்ளது.

எனவே அந்த 550 கோடி ரூபாயைத் தமிழகத்தில் அதுவும் நம்ம சென்னையில் முதலீடு செய்ய செஞ்சுரி பிளைவுட்ஸ் செய்ய முடிவு செய்துள்ளது.

அதற்காக 30 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட்டு செஞ்சுரி பிளைவுட்ஸ் நிறுவனத்துக்குத் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.

சென்னையில் அமைக்கப்படும் இந்த தொழிற்சாலையிலிருந்து ஆண்டுக்கு 3,60,000 கியூபிக் மீட்டர் பிளைவுட்களை செஞ்சுரி பிளைவுட்ஸ் தயாரிக்கும் என தெரிவித்துள்ளது.

இந்த முதலீடு மூலம் கிட்டத்தட்ட 700 நபர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version