/srv/users/bhoomitoday/apps/bhoomitoday/public/wp-content/themes/zox-news/amp-single.php on line 77

Warning: Trying to access array offset on value of type bool in /srv/users/bhoomitoday/apps/bhoomitoday/public/wp-content/themes/zox-news/amp-single.php on line 77
" width="36" height="36">

தமிழ்நாடு

பள்ளிகள் திறந்ததும் என்ன செய்ய வேண்டும்? புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

Published

on

பள்ளிகள் திறப்பு குறித்து எடுக்கப்பட வேண்டிய தேவையான நடவடிக்கைகள் அடங்கிய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது கொரோனா பரவல் சிறிது சிறிதாக குறைந்து வரும் நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்தும், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசாங்கம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது.

அதன்படி, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்களை மீண்டும் கல்வி கற்க தொடங்க வேண்டும், முடிந்தால் நடமாடும் பள்ளிகளை அமைத்து மாணவர்களை பயிற்றுவிக்க வேண்டும், வீடு வீடாக சென்று படிப்பை நிறுத்திய மாணவர்களை அழைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆன்லைன் மூலம் கல்வி கற்க முடியாத மாணவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும், பாடத்திட்டத்தை குறைக்க வேண்டும், அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி பெற செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Trending

Exit mobile version