இந்தியா
காலாவதி ஆகும் தடுப்பூசிகள்: மாநில அரசுக்கு மத்திய அரசு முக்கிய உத்தரவு!
நாடு முழுவதும் காலாவதியாக போகும் தடுப்பூசி குறித்த முக்கிய அறிவிப்பை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வெளியிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் மட்டும் சுமார் 50 லட்சம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. .
இந்த தடுப்பூசிகளை மத்திய அரசு மாற்றி தர வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்ட நிலையில் அதற்கான பேச்சுக்கு இடமில்லை என்று இந்திய மருத்துவ கழகம் கூறிவிட்டது..
இந்த நிலையில் நாடு முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் காலாவதியாகும் தடுப்பூசியை மாநில அரசுகள் மாற்றி தருவதில் எந்தவித தடையும் இல்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
எனவே மாநில அரசுகள் தனியார் மருத்துவமனைகளில் காலாவதி தேதி நெருங்கும் தடுப்பூசிகளை மாற்றி தருமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காலாவதி ஆகும் நிலையில் உள்ள தடுப்பூசிகள் மேற்கு வங்காளம், கர்நாடகா, கேரள மாநிலங்களில் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.