சினிமா செய்திகள்

திரை அரங்குகளில் 100% பார்வையாளர்கள் அனுமதி என்ற முடிவைத் தமிழக அரசு திரும்பப்பெறவேண்டும்: மத்திய அரசு

Published

on

திரை அரங்குகளில் 100% பார்வையாளர்கள் அனுமதி என்ற முடிவைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

ஜனவரி 4-ம் தேதி தமிழகத்தில் உள்ள திரை அரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது.

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்குத் திரைத் துறையினர் வரவேற்பு அளித்து இருந்தாலும், மருத்துவர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் தமிழக அரசின் திரை அரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதி என்ற முடிவு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் விதிகளுக்கு எதிரானது. 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே திரை அரங்குகளில் அனுமதி வழங்க வேண்டும்.

தற்போது தமிழக அரசு எடுத்துள்ள இந்த முடிவிலிருந்து பின்வாங்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version