வேலைவாய்ப்பு
மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை வேலை!
மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் நேரு யுவகேந்திரா தேசிய இளையோர் தொண்டர் பணிக்கு 12,000 காலியிடங்கள் உள்ளது. இதற்கு மார்ச் 3 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்:12,000
வேலை: உயர்கல்வி, கணினித்திறன் பெற்றவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர், மகளிர் மன்ற உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது:18 முதல் 29 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் நேருயுவகேந்திரா www.nyks.nic.in இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் தேதி: மார்ச் 3 ஆம் தேதி கடைசி நாளாகும்.
இது குறித்து, நேரு யுவகேந்திரா அமைப்பின் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நேரு யுவகேந்திராவில் தேசிய இளையோர் தொண்டராகப் பணியாற்றுவதற்கு 18 முதல் 29 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு மாத மதிப்பூதியமாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும். அடிப்படை கல்வித்தகுதி 10 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உயர்கல்வி, கணினித்திறன் பெற்றவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர், மகளிர் மன்ற உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முழு நேர மாணவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியாது.