வேலைவாய்ப்பு

மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை வேலை!

Published

on

மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் நேரு யுவகேந்திரா தேசிய இளையோர் தொண்டர் பணிக்கு 12,000 காலியிடங்கள் உள்ளது. இதற்கு மார்ச் 3 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்:12,000

வேலை: உயர்கல்வி, கணினித்திறன் பெற்றவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர், மகளிர் மன்ற உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது:18 முதல் 29 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் நேருயுவகேந்திரா www.nyks.nic.in இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் தேதி: மார்ச் 3 ஆம் தேதி கடைசி நாளாகும்.

இது குறித்து, நேரு யுவகேந்திரா அமைப்பின் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நேரு யுவகேந்திராவில் தேசிய இளையோர் தொண்டராகப் பணியாற்றுவதற்கு 18 முதல் 29 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு மாத மதிப்பூதியமாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும். அடிப்படை கல்வித்தகுதி 10 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உயர்கல்வி, கணினித்திறன் பெற்றவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர், மகளிர் மன்ற உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முழு நேர மாணவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியாது.

seithichurul

Trending

Exit mobile version