இந்தியா

திடீரென மயங்கி விழுந்த மத்திய அமைச்சர்!

Published

on

பெங்களூருவில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர் மாவட்டம் சித்ரதுர்காவில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது உணவு இடைவேளையின் போது எதிர்பாராதவிதமாக திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து அருகிலிருந்த அதிகாரிகள் அவரை உடனடியாக சித்ரதுர்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

சதானந்தவை பரிசோதித்த டாக்டர்கள் சர்க்கரை அளவு குறைந்திருப்பதாகவும், இதன் காரணமாகவே மயக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். பின்னர் சிகிச்சை முடிந்து, மயக்கம் தெளிந்த அவரை, மேல்சிகிச்சைக்காக பெங்களூருக்கு அழைத்தச் சென்றனர்.

தற்போது பெங்களூர் தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை வழங்கப்படு வருகிறது. அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். அவரது உடல்நிலை குறித்து முதல்வர் எடியூரப்பா, மாநில பாஜக தலைவர் நளின்குமார் கட்டீல் உள்பட அக்கட்சி தலைவர்கள் தொலைபேசியில் நலம் விசாரித்தனர்.

Trending

Exit mobile version