தமிழ்நாடு

சென்னை மக்களுக்கு அதிர்ச்சி தந்த மத்திய அரசு: என்ன செய்ய போகிறது தமிழக அரசு?

Published

on

சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதையடுத்து சென்னையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளதால் சென்னை மக்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் கொரனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு சுகாதார துறை செயலாளருக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் சென்னையில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா அதிகரித்துள்ளது என்றும் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் 987 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் டிசம்பர் 4வது வாரத்தில் இரு மடங்காக அதாவது 1720 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாமதமாக கொரோனா கண்டறியப்பட்டதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்றும் அதனால் சென்னையில் கொரோனா பரிசோதனையும் அதிகரிக்க வேண்டும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து தமிழக அரசு சென்னையில் வெகு விரைவில் தீவிர கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சென்னைக்கு மட்டும் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படுவது குறித்த ஆலோசனையும் நடந்து வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என்றும் கூறப்பட்டு வருவதால் சென்னை மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version