இந்தியா
தொகுதி மேம்பாட்டு நிதி: மீண்டும் மத்திய அரசு அனுமதி!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியை மத்திய அரசு மீண்டும் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்த காரணத்தினால் செலவினை குறைக்கும் வகையில் மத்திய அரசு எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்தி வைத்தது.
இந்த நிதியை மீண்டும் மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் எம்பிக்கள் தங்களது தொகுதிகள் செய்ய வேண்டிய பணிகளுக்கு மத்திய அரசு தடை விதிக்க கூடாது என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன.
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்துள்ளதை அடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியை மத்திய அரசு மீண்டும் அனுமதி அளித்துள்ளது.
இதன் காரணமாக எம்பிகளுக்கு சேர வேண்டிய தொகுதி மேம்பாட்டு நிதியை கிடைக்கும் என்பது மக்கள் தங்கள் தொகுதியில் உள்ள மேம்பாட்டு பணிகளை இனி தொடர்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.