Connect with us

இந்தியா

டுவிட்டர், பேஸ்புக் நிறுவனங்களுக்கு 36 மணி நேரம் கெடு கொடுத்த மத்திய அரசு!

Published

on

மத்திய மாநில அரசுக்கு எதிராகவும் மாநில முதல்வர் மற்றும் பிரதமர் உள்பட உயர் பதவியில் உள்ளவர்களுக்கு எதிராகவும் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.

புரட்சி, பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் நாட்டை பிளவுபடுத்தும் வகையில் பல கருத்துக்களை பகிரப்பட்டு வருவதாகவும் இது போன்ற கணக்குகளை முடக்க வேண்டும் என்றும் மத்திய அரசு சமூக வலைதளங்களுக்கு ஏற்கனவே வேண்டுகோள் விடுத்து வந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்தவர்களின் கணக்குகளை முடக்க வேண்டும் என மத்திய அரசு கூறியதை அடுத்து மத்திய அரசுக்கும் டுவிட்டர் நிர்வாகத்திற்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ’கூ’ என்ற சமூக வலைதளத்தை மத்திய அரசு பரிந்துரை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் அந்நிய சக்திகளின் ஊடுருவல் காரணமாக பதிவு செய்யப்படும் தேசவிரோத பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் மத்திய அரசு இவ்வாறு நீக்குவதற்கு பரிந்துரை செய்த 36 மணி நேரங்களுக்குள் அந்த பதிவுகள் நீக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல் அரசுக்கும் நீதிமன்றத்திற்கும் முதல்வர், பிரதமர் போன்றவர்களுக்கு எதிரான கருத்துக்களை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டால் அவை 36 மணி நேரத்திற்குள் நீக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளர்கள் உள்ள நிறுவனங்கள் இந்தியாவில் அலுவலகம் அமைக்க வேண்டும் என்ற சட்டத்திருத்தம் கொண்டு வரவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

author avatar
seithichurul
தமிழ்நாடு12 நிமிடங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு25 நிமிடங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்40 நிமிடங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா2 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்2 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா3 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!