Connect with us

இந்தியா

7-11 வயதினர்களுக்கு தடுப்பூசி: சீரம் நிறுவனத்திற்கு அனுமதி!

Published

on

இந்தியாவில் 7 முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்ள சீரம் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

கொரோனா வைரஸில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பது குறித்து மத்திய மாநில அரசுகள் கடந்த பல மாதங்களாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தமிழகத்தை பொருத்தவரை ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு லட்சக்கணக்கானவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி தினந்தோறும் அரசு மருத்துவமனைகளிலும் ஒரு சில சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டும் அதில் பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. உதயநிதி ஸ்டாலினின் தொகுதியான சேப்பாக்கம் தொகுதியில் வீடு வீடாக சென்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் பெரியவர்களுக்கு கிட்டத்தட்ட 50 சதவீத மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட நிலையில் சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான பரிசோதனைகளும் நடைபெற்று வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் 7 முதல் 11 வயதினருக்கான சிறுவர்களுக்கு தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்ள இந்தியாவின் சீரம் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து அந்த நிறுவனம் 11 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான தடுப்பூசியை மருத்துவ ரீதியில் பரிசோதனை செய்து வருகிறது. இந்த தடுப்பூசி இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது என்பதும் இந்த பரிசோதனையின் முதல் கட்டமாக 100 பங்கேற்பாளர்களுக்கு பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த பரிசோதனை வெற்றிகரமாக முடிந்தால் விரைவில் 7 முதல் 11 வயதான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடங்கும் என்றும் 12 வயது மேற்பட்டவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் அந்த தடுப்பூசி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

author avatar
seithichurul
ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா10 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்10 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்10 மணி நேரங்கள் ago

அம்பானி குடும்பத்தினர் ரிலையன்ஸ் நிறுவனத்தில் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?