வணிகம்
ஊழியர்களின் அகவிலைப் படி உயர்வை நிறுத்தி ரூ.37,500 கோடியைச் சேமிக்கும் மத்திய அரசு!
![New 500 and 2000 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/12/New-500-and-2000.jpg)
மத்திய அரசு 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் 30ம்-ம் தேதி வரையில் ஊழியர்களின் அகவிலைப் படி உயர்வை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அரசு ஊழியர்களின் அகவிலைப் படி நிறுத்தப்படுவதால் 37,500 கோடி ரூபாய் மத்திய அரசுக்குக் கிடைக்கும். இதில் மத்திய அரசு கீழ் வரும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணமும் அடங்குமாம்.
மத்திய அரசுக்குக் கிடைக்கும் இந்த சேமிப்பு கொரோனா நிவாரண பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
நாடு முழுவதிலும், அனைத்து மாநில அரசுகளும் இதே முடிவை எடுத்தால் 82,566 கோடி ரூபாய் சேமிப்பு கிடைக்கும்.