இந்தியா
மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய மத்திய அரசு தடையா?
புதிய மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக மின்சார ஸ்கூட்டர் அவ்வப்போது திடீர் திடீரென தீப்பிடித்து எரிந்து வருகிறது. மின்சார ஸ்கூட்டரில் உள்ள பேட்டரி பழுதாகி தீப்பிடித்து எரிவதாக கூறப்பட்டதை அடுத்து மின்சார ஸ்கூட்டர் நிறுவனங்கள் ஏற்கனவே விற்பனை செய்த மின்சார ஸ்கூட்டர்களை திரும்பப் பெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது .
மேலும் மின்சார ஸ்கூட்டர் தீ விபத்தில் ஒரு சிலர் உயிரிழந்த நிலையில் அந்த புத்தகங்களை வாங்கி இருந்தவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது .
இந்த நிலையில் புதிய ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதிய ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்த வேண்டாம் என்றும் அனைத்து மின் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மின்சார வாகனங்கள் தீப்பற்றி எரிவதை தடுக்க உரிய தீர்வை கண்ட பின்னரே புதிய வாகனம் விற்பனையைத் தொடங்கலாம் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.