வணிகம்
டிசம்பர் 1 முதல் வணிக ரீதியாக டிரோன்கள் பயன்படுத்த அனுமதி!
மத்திய அரசு திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் ரிலியல் எஸ்டேட், பவர் மற்றும் விவசாயத் துறைகளில் டிசம்பர் 1 முதல் வணிக ரீதியாக டிரோன்களைப் பயன்படுத்த அனுமதி அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாகப் பகல் நேரங்களில் சைட்களைப் பார்வையிட மட்டும் 400 அடி வரையில் டிரோன்கள் பறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு இந்தியாவில் பொருட்கள் டெலிவரி செய்ய மற்றும் உணவுகளை டெலிவரி செய்ய எல்லாம் டிரோன் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் டிரோன் மூலம் பொருட்களை டெலிவரி செய்வதைச் சோதனை செய்தது மட்டும் இல்லாமல் அதற்கான அனுமதியைப் பெற காத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.