இந்தியா
தேவைப்பட்டால் 144 தடை உத்தரவு பிறப்பித்து கொள்ளுங்கள்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி
தேவைப்பட்டால் 144 தடை உத்தரவை பிறப்பித்து கொள்ளுங்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இதனை அடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு, கட்டுப்பாடுகள் என மாநில அரசுகள் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகின்றன.
எத்தனை தடை உத்தரவு விதித்தாலும் பொதுமக்கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து தேவைப்பட்டால் மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என்றும் அப்படியே வெளியே சென்றாலும் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.