வேலைவாய்ப்பு
மத்திய அரசின் யுபிஎஸ்சி(UPSC)வெளியீடு-சிவில் சர்வீஸ் தேர்வு-2019!உடனே விண்ணப்பியுங்கள்.
மத்திய அரசின் யுபிஎஸ்சி என்ற மத்திய குடிமையியல் தேர்வு பணிகள் ஆணையத்தின் சார்பில், ஐஏஎஸ், ஐபிஎஸ் என 24 விதமான பதவிகளுக்குச் சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது 2019 ஆம் ஆண்டுக்கான தேர்வு 896 குடிமையியல் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
தேர்வு: UPSC-Civil Services Examination in 2019
மொத்த காலியிடங்கள்: 896
வயது: 01.08.2019 தேதியின்படி 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு மத்திய அரசின் விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இறுதியாண்டு தேர்வு எழுதவுள்ளவர்களும், தேர்வு முடிவுக்காகக் காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு கட்ட எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலை தேர்வு எனும் முதல் கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தகட்ட தேர்வான முதன்மை தேர்வான இரண்டாம் கட்ட தேர்வு நடத்தப்படும். பின்னர் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் புதுச்சேரியில் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள https://upsc.gov.in/sites/default/files/Final_Notice_CSPE_2019_N.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.03.2019