இந்தியா

மத்திய அமைச்சர் சென்ற கார் விபத்து! அமைச்சரின் மனைவி, உதவியாளர் பலி!!

Published

on

கர்நாடகாவில் மத்திய அமைச்சர் ஸ்ரீபத் நாயக்கின் கார் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய ஆயுஷ் துறையின் அமைச்சர் ஸ்ரீபத் நாயக், நேற்று தனது குடும்பத்தனர்களுடன் கர்நாடகவின் உத்தர கன்னடா மாவட்டத்திலுள்ள  எல்லாப்புரா கணபதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்பு, கர்நாடகா அங்கோலாவில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் திடீரென நிலை தடுமாறி சாலை அருகே கிடந்த பள்ளத்தில் கவிழந்து விபத்துக்குள்ளானது.

இதில் மத்திய அமைச்சர் ஸ்ரீபத்தின் மனைவியும், உதவியாளரும் பலத்த காயமடைந்த சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அமைச்சர் ஸ்ரீபத்திற்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மருத்துவ நிபுணர்கள், உடனே அவர்களை மீட்டு அங்கோலா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மத்திய அமைச்சர் ஸ்ரீபத் மட்டும் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  கோவா முதல்வர் பிரோமத் சாவந்த், மத்திய அமைச்சர் ஸ்ரீபத்தின் உடல்நலம் விசாரித்தார். பின்னர், அமைச்சர் ஸ்ரீபத் அபாய கட்டத்தைத் தாண்டி விட்டதாகவும், சிறிய அறுவை சிகிச்சை மட்டும் உள்ளதாகவும் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் ஸ்ரீபத், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், காரில் உடன் சென்ற மற்ற உதவியாளர்களுக்கு அங்கோலா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Trending

Exit mobile version